ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.
அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.