செய்திகள்

தலைமை பயிற்சியாளர் யார்? என்ற அறிவிப்பு இன்று இல்லை: கங்குலி

தலைமை பயிற்சியாளர் நியமிப்பது குறித்து கேப்டன் மற்றும் சிலரிடம் பேச வேண்டியிருப்பதால், பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு இன்று இல்லை எனக் கங்குலி கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்திய அணி வரும் 26-ந்தேதி இலங்கையுடன் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. இந்த தொடருக்கு முன் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க கங்குலி தலைமையிலான ஆலோசனைக்குழு (கங்குலியுடன் லஷ்மண், தெண்டுல்கர்) தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 10 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 6 பேரிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு, மாலை புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேர்காணல் முடிந்த பின்னர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை என்று கூறினார்.

புதிய தலைமை பயிற்சியாளர் குறித்து கங்குலி கூறுகையில் ‘‘புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு இன்று இல்லை. இன்னும் சில நாட்கள் தேவைப்படுகிறது. இன்று ராஜ்புட், ரவி சாஸ்திரி, சேவாக், பைபஸ் மற்றும் டாம் மூடி ஆகியோருடன் நேர்காணல் நடைபெற்றது.