தற்போது நடந்து முடிந்துள்ள பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடத்தில் வெற்றி பெற்றது. வருகிற 18-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் வழியில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன சங்ககரா அரசியலில் களம் இறங்க இருக்கிறார் என்ற செய்தி வந்தது.
இந்நிலையில் அப்படி என்ற எண்ணமே இல்லை என்று சங்ககரா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘என்னைப் பற்றி வரும் யூகம் மற்றும் வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் எனக்கில்லை.