புதுடெல்லி:
ரெயில்வே துறையில் விடப்படும் டெண்டர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் வழக்கத்தை கைவிட ரெயில்வே துறை தற்போது முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் டெண்டர் விளம்பரங்கள் அளிப்பதனால் ஏற்படும் அதிகப்படியான செலவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் டெண்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RailwayBoard