சென்னை காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று முதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக வெளியான தகவல் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை சீர்படுத்துவதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, விமானம் மூலம் சென்னை வந்தடைந்த மத்திய மந்திரி நிதின் கட்கரி காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். அவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு சென்ற அவர்கள் காவிரி மருத்துவமனையில் இருந்த மு.க ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினரிடம் அவரது உடல்நிலைக் குறித்து கேட்டறிந்தார்.