ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது. இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி நிசான் நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகை மற்றும் வரிச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் தமிழக அரசு ஒப்புக்கொண்டபடி ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகள் என மொத்தம் 5000 கோடி ரூபாய் பாக்கியை தராமல் இழுத்தடிப்பாக நிசான் நிறுவனம் கூறியது. இதுதொடர்பாக 2016-ம் ஆண்டு பிரதமருக்கு நிசான் நிறுவனம் நோட்டீசும் அனுப்பியது. பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், நிசான் நிறுவனம், தமிழக அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.