செய்திகள்

கேரளாவில் மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப மத்திய மந்திரி உத்தரவு

கேரளாவில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #NirmalaSitharaman

தென்மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் தீவிரமடைந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இடைவிடாத பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு பாலங்கள் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது.