செய்திகள்

பஞ்சாப் ரெயில் விபத்து - மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AmritsarTrainAccident

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் பகுதியில் நடைபெற்ற தசரா விழாவின்போது ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்குமாறு முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அம்மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை இறந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கினார்.