எரிமலை வெடித்தபோது எடுத்தப் படம் 
செய்திகள்

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பில் காயமடைந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 18 ஆக உயர்ந்தது.

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று திடீரென இன்று வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் பலர் காயமடைந்தனர். மேலும் பலரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தீக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக
காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT