மெக்சிகோ சிட்டி:
அமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவில் போதை மாபியாக்கள் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில், இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கவுதலஜாரா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சமீபத்தில் தனிமையில் இருந்த காதல் ஜோடி போலீசாரால் தொல்லைக்கு உள்ளாயினர்.
இதனை அடுத்து, பொது இடங்களில் செக்ஸ் உறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என கவுன்சிலர் ஒருவர் நகர சபையில் முறையிட்டார். இதனை அடுத்து, அடுத்தவர் தொல்லைக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கும் வரை பொது இடங்களில் செக்ஸ் உறவில் ஈடுபடும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.