ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் பலர் அரசுக்கு புகார் செய்தனர்.
இதன் எதிரொலியாக ‘பிளிப்கார்டு’, ‘அமேசான்’ போன்ற ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒரு கம்பெனி ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுடனோ, அந்த நிறுவனங்களின் இதர குழுக்களுடனோ பங்குதாரராக இருந்தால் அந்த கம்பெனியின் உற்பத்தி பொருட்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. #CentralGovernment #OnlineShopping