புகார் கொடுக்க புதிய செல்போன் எண் 
செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் கொடுக்க புதிய செல்போன் எண்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க புதிய செல்போன் எண்ணை துணை கமிஷனர் ஜெயலட்சுமி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு என்ற புதிய போலீஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. மாநில அளவில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஒருவர் இந்த பிரிவுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார். மாவட்ட அளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.