வழக்கு பதிவு 
செய்திகள்

தம்பதியை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு

நெம்மேலிப்பட்டி அருகே தம்பதியை தாக்கிய தந்தை-மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாலை மலர்

ஆதனக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள நெம்மேலிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு(55). மட்டையன்பட்டியை அடுத்துள்ள தனக்கு சொந்தமான வயல் அருகே புறம்போக்கு இடத்தை கடந்த வாரம் ரெங்கராஜும், அவரது மனைவி சின்னப்பொண்ணும் சுத்தம் செய்தபோது, அங்கு வந்த ரெங்கராஜின் அண்ணன் நடராஜன், அவருடைய மகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து அந்த இடத்தில் தனக்கும் பங்கு உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவதூறாக பேசி 2 பேரையும் குச்சியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ரெங்கராஜ், சின்னப்பொண்ணு ஆகியோர் வாராப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் நடராஜன், சங்கர் ஆகியோர் மீது ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.