கமல் ஹாசன் 
செய்திகள்

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா?: கமல்ஹாசன் டுவீட்

நீட் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இடையே கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? என கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாலை மலர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்

‘‘தேர்விலேயே ஆள் மாறாட்டம், 

முடிவுகளில் முழுக் குழப்பம்.

இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,

உள் ஒதுக்கீடும் துறப்பு. 

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? 

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.’’

எனப் பதிவிட்டுள்ளார்.