செய்திகள்

நீலாங்கரை அருகே மாமியார் கொடுமையால் இளம்பெண் தற்கொலை

நீலாங்கரை அருகே மாமியார் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழிங்கநல்லூர்:

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி அருள் பிரியா(24). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இதனால் பெற்றோர் நகை போடவில்லை. இதனால் மாமியார் அநாகரிகமாக பேசினார். இதனால் வேதனை அடைந்த அருள் பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாமியார் கொடுமையால் மகள் அருள் பிரியா தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்

நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.