செய்திகள்

நீலாங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை

நீலாங்கரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தல் நகர் வடக்கு 18-வது தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சுமதி (38), இவர்கள் கிண்டியில் மகளிர் தங்கும் விடுதிகள் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இவர்கள் வீட்டை பூட்டி விட்டு கிண்டி விடுதிக்கு சென்று விட்டனர். அங்கிருந்து நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புறக்கதவு பூட்டியபடியே இருந்தது.

அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.