இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக 260 முதல் 270 ரன்கள் அடித்தால் சிறந்த முறையில் நெருக்கடி அளிக்க முடியும் என வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்தசா கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு எதிராக நாங்கள் 260 முதல் 270 ர ன்கள் அடித்தால், அது நெருக்கடி கொடுக்கும் அளவிற்கான ஸ்கோராக இருக்கும். எனினும், அது வெற்றிக்கான ரன்கள் என்னால் உறுதியாக கூற இயலாது. நாங்கள் முதலில் பந்து வீசினால், அவரைகள் குறைந்த ரன்னில் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி என்றால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.