தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்தபடி ஒருவர் ஆபத்தான பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், 2 நபர்கள் பைக்கில் அமர்ந்துள்ளனர். அதில் பர்தா அணிந்த நபர் பைக்கை ஓட்டுகிறார். பர்தா அணிந்தவர் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபடுவதை சுற்றி உள்ளவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பர்தா அணிந்து பைக் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். பைக்கின் பின்னர் உட்கார்ந்து வந்த இளைஞர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.