இந்தியா

கணவரை கொன்று வீட்டின் அருகே உடலை புதைத்த மனைவி அவரது காதலனுடன் கைது

கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

ஃபரிதாபாத்தின் மொஜாபாத் கிராமத்தில், கணவரை கொன்று வீட்டின் அருகே உள்ள குழியில் உடலை புதைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையின் தகவலின்படி, மொஜாபாத் கிராமத்தில் உள்ள ஒரு குழியில் ஒருவர் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகத் திகாவ் (Tigaon) காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் குழுவினர், கடமை பொறுப்பிலுள்ள நீதிபதி முன்னிலையில் உடலை மீட்டனர்.

கொலை வழக்கு பதிவு:

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தாதாவ் என்பவரும், உயிரிழந்தவரின் சகோதரருமான ராம்பீர் அளித்த புகாரின் பேரில், கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

உயிரிழந்தவர் ஹத்ராஸைச் சேர்ந்த ஷியாம்வீர் (42) என்றும், அவர் தனது மனைவியுடன் மொஜாபாத் கிராமத்தில் வசித்து வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஷியாம்வீரின் மனைவி கேஷவ் மற்றும் அவரது காதலன் எனக் கூறப்படும் உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த காமத் ஆகியோர் ஆவர்.

காவல்துறையின் விசாரணையில், காமத் மொஜாபாத்தில் உள்ள ஷியாம்வீரின் வீட்டில் அவருடன் தங்கியிருந்ததும், கேஷவ்வுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது; இது ஷியாம்வீருக்குத் தெரியவந்தது. இதனால் ஷியாம்வீருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மதுபோதையில் தகராறுகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

அதிர்ச்சி சம்பவம்:

ஷியாம்வீரை ஒழித்துக்கட்ட கேஷவ் மற்றும் காமத் ஆகியோர் சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று மாலை, காமத் ஷியாம்வீருக்கு மது அருந்த கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது, ​​'இன்டர்லாக்கிங் டைல்' (interlocking tile) கல்லை கொண்டு தலையில் தாக்கி அவரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க கேஷவ் வீட்டின் கதவை வெளியில் இருந்து மூடியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து ஷியாம்வீரின் உடலை வீட்டின் அருகே உள்ள குழியில் மண்ணுக்கு அடியில் புதைத்ததாககாவல்துறையினர் தெரிவித்தனர்.

"நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று குற்றப்பிரிவு ஏசிபி (ACP) அமன் யாதவ் கூறினார்.