ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 30 வரையிலான 40 நாட்கள் 'சில்லாய் காலன்' என்று அழைக்கப்படுகிறது.
இது மிகவும் கடுமையான குளிர் நிலவும் காலமாகும். தற்போது அந்த உச்சக்கட்ட குளிர் நிலவி வருகிறது.
பள்ளத்தாக்கு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாகக் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
எங்குப் பார்த்தாலும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போலப் பனி படர்ந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இதனை ரசித்தாலும், போக்குவரத்து பாதிப்பால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வீடுகள், சாலைகள் அனைத்தும் பனியால் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காந்தர்பால், ரஜௌரி, வைஷ்ணோ தேவி கோயில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
சாலைகளில் பல அடி உயரத்திற்குப் பனி தேங்கியுள்ளதால், முக்கியச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் ரெயில் சேவை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இயந்திரங்களின் உதவியுடன் பனியை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
Udhampur Police coming through in real time. ❄️12 people, including women and children, rescued from a heavy snowstorm in the upper ridges of Basantgarh.Trekked kilometres through snow and fog, brought everyone to safety, food, shelter, and medical aid ensured.This is what… pic.twitter.com/BoWnlE7iT6