மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம்பெண் துப்பாக்கி முறையில் கடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மண்ட்சௌர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், கர்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த இளம்பெண், அவரது குடும்பத்தினர் ஏழு பேரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
தகவலறிந்து விரைந்த போலீசார், சில மணிநேரங்களில் அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்பட்டதால், வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்ததால், அவரை குடும்பத்தினர் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.