பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது.
டெல்லி கார் வெடிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
முன்னதாக, டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.