இந்தியா

சிக்கன் பீஸால் வந்த சிக்கல்.. கைகலப்பாக மாறிய திருமண வீடு.. 15 பேர் காயம்: நடந்தது என்ன?

இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைக்கலப்பாகி உள்ளது.ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

மாலை மலர்

உத்தர பிரதேசம் மாநிலம் பிஜுனூரில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அப்போது, திருமண நிகழ்வில் பரிமாறப்பட்ட சிக்கன் துண்டுகள் சிறியதாக இருந்ததாக மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, மணமகன் வீட்டாருக்கு பொறித்த சிக்கன் சிறிய துண்டுகளாகவும், மணமகள் வீட்டாருக்கு பெரியதாகவும், அதிகமாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி உள்ளது.

சிக்கன் பிரச்னையில் திருமண வீடுடே கலவர வீடாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில், 15 பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.