இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அமைச்சர் சேகர்பாபு

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரசித்திப் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன.