ஜம்மு காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. அப்போது பணம் திருடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது பொதுமக்களை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று கைது செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் சட்டையை கழற்றி அவரது கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
போலீசாரின் இந்த செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
#Jammu: Bakshi Nagar police caught a thief and made him wear a garland of shoes while walking him through the market.#JammuAndKashmir pic.twitter.com/9iAJTDIuBx