கேரளம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக வீ.டி.சதீசனை காங்கிரஸ் தேசிய தலைமை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
கேரள சட்டமன்ற தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வரை தேர்வு செய்வதில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.
புதிய முதல்வர் அறிவிக்கப்பட்ட நிலையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.