டெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு மைதானத்தில் இருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்களை வெளியேற்றி, அந்த மைதானத்தில் தனது நாயுடன் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் நடைப்பயிற்சி செய்த சம்பவம் சர்ச்சை ஆனது. 2022-ஆம் ஆண்டில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதற்கு தண்டனையாக மத்திய உள்துறை அமைச்சகம் அவரை டெல்லியிலிருந்து லடாக்-கிற்கு இடமாற்றம் செய்தது.
லடாக்கில் பணியாற்றி வந்த அவர், தற்போது மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு டெல்லி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டது.
டெல்லி மாநகராட்சி ஆணையராக இருந்த அஸ்வினி குமார், தற்போது ஜம்மு காஷ்மீருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காலம் கடந்தால் மக்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள் என்ற நினைப்பில் சஞ்சீவ் கிர்வாருக்கு மீண்டும் டெல்லியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.