தெலுங்கானாவில் மலையேற்றம் சென்ற ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ டவுன்ஷிப்பைச் சேர்ந்தவர் பிரியமோல் (வயது 47), மவுண்ட் கார்மல் குளோபல் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.
அவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அனந்தகிரி நகர்ப்புற பூங்காவிலிருந்து மலையேற்றத்திற்குச் சென்றிருந்தார்.
கண்காணிப்புக் கோபுரத்திற்கு அருகில் சென்றபோது, அவர் வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை விகாராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.