உ.பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, அவர் இரண்டு முறை டெல்லி சென்றுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தபோது அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.