திருவனந்தபுரம்:
கேரளாவின் கரிப்பூர் விமான நிலையத்திற்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணி ஒருவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 570 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்ததாக நிஷாத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.