அப்போது, சோஹாதி கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் சடலமாக கிடந்த சிறுவனை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
அதில், உயிரிழந்த 8 வயது சிறுவனுக்கும் அவனது நண்பனான 13 வயது சிறுவனுக்கும், கடந்த வாரத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாயின் பணம், சில பொருட்கள் காணாமல் போனதற்கு 13 வயது சிறுவனே காரணம் என்று 8 வயது சிறுவன் குற்றம்சாட்டியதாக தெரிகிறது.
இதனால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பழிக்குப்பழி தீர்க்க நினைத்த 13 வயது சிறுவன், 8 வயது சிறுவனை கடத்தி காட்டிற்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.