புதுடெல்லி:
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாடுகள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நமது நாட்டையும், சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள். மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் நமது அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு மோடி கூறியுள்ளார்.