பிரதமர் மோடியை சந்தித்த நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 
இந்தியா

பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு

உக்ரைன், ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபா 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேபாள பிரதமர் சேர் பதூர் தியூபா இன்று காலை சந்தித்தார்.

அப்போது இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு  பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதையும் படியுங்கள்...டெல்லி, பஞ்சாபை தொடர்ந்து குஜராத் மீது கவனம் திருப்பும் ஆம் ஆத்மி