இதற்கிடையே, கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின் போது, வாக்குச் சாவடிக்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதில் வாக்காளர் ஒருவர் காயமடைந்தார். வடக்கு கொல்கத்தாவின் வார்டு 36ல் உள்ள டாக்கி ஆண்கள் பள்ளிக்கு வெளியே இன்று இந்த சம்பவம் நடந்தது.
இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பரவலான தேர்தல் முறைகேடுகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் இப்போது நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என்று அவர் கூறினார்.