இந்தநிலையில் இந்த ஏவுகணை சோதனை ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்தப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை விஞ்ஞானிகள் குழுவினர் கூட்டாக இந்த சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது ஹெலினா ஏவுகணை இலகு ரக ஹெலிகாப்படரில் இருந்து ஏவப்பட்டது. அது துல்லியமாக பாய்ந்து சென்று பீரங்கிகளை தாக்கியது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக மத்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.