திருப்பதி:
திருப்பதி விமான நிலையம் வந்து ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள், தாங்கள் விமானத்தில் வந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்து, தேவஸ்தானத்தின் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை மற்றும் ரூ. 500 கட்டணம் செலுத்தி, 'விஐபி பிரேக்' தரிசன டிக்கெட் பெற்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இதன் மூலம், ஒரு பக்தர் ரூ.10 ஆயிரத்து 500 கட்டணத்தில், ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த கவுண்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் மீண்டும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் கவுண்டர், இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.