இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சாக்ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.