கொரோனா தொற்று 
இந்தியா

பிப்ரவரி 15-ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப்பெறுகிறது அசாம்

பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

அதன்படி, வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்களில், பள்ளி பொதுத் தேர்வுகள், நகராட்சித் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் திட்டமிட்டதுபோல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுத் தேர்வு எழுதும் மா ணவர்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.