இந்தியா

பெங்களூருவில் விமான கண்காட்சி- இறைச்சி கடைகளை மூட அதிரடி உத்தரவு

ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை அப்பகுதியில் உள்ள 10 கி.மீ., தொலைவில் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.தடை உத்தரவை மீறுபவர்கள் மீது விமானப்படை விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அருகே 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெற உள்ளது. எலஹங்கா விமானப்படை தளத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி முதல் 5 நாட்களுக்கு விமான கண்காட்சி நடைபெறுகிறது.

இதற்காக ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை அப்பகுதியில் உள்ள 10 கி.மீ., தொலைவில் இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மீன், கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை செய்யும் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது விமானப்படை விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT