நிலநடுக்கம் 
இந்தியா

அந்தமான் நிக்கோபாரில் 4.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு

நிலநடுக்கம் எதிரொலியாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை.

மாலை மலர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூர் பகுதியில் நேற்று இரவு 11.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவான நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் எதிரொலியாக உயிரிழப்போ அல்லது உடமைகள் சேதம் ஏற்பட்டது குறித்து தகவல் இல்லை.