மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ரன்வீர் கப்பலின் உள்பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27-ம் தேதிக்கு மாற்றம்- மத்திய அரசு அறிவிப்பு