இந்தியா

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி- பிரதமர் வாழ்த்து

சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 207 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மம்தா பானர்ஜி தலைமையலான திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வென்று எதிர்க்கட்சி இருக்கையில் அமர உள்ளது.

நேற்று அமித் ஷா தலைமையில் நடந்த வெற்றி வேட்பாளர்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக பவானிப்பூர் மற்றும் நந்திகிராமில் வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இவரே மேற்கு வங்க முதல்வராகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய அரசு பதவியேற்பு விழா கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதில், சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.