மத்யபிரதேசத்தில் மனைவி முன் தன்னை அங்கிள் என்று கூப்பிட்ட நபரை கணவர் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு ரோகித் என்ற நபர் கடந்த சனிக்கிழமை தனது மனைவியுடன் துணி வாங்க வந்துள்ளார். கடையில் வேலை பார்த்து வந்த விஷால் சாஸ்த்ரி அவர்களுக்கு புடைவைகளை எடுத்து காட்டியுள்ளார்.
எந்த ரேட்டில் புடவை வேணும் என்று கேட்டதற்கு ஆயிரம் ருபாய் ரேஞ்சில் காட்டுங்கள் என்று ரோகித் சொல்லியுள்ளார். அதற்கு விஷால் கூறியதாவது, அங்கிள் அதற்கு மேல் உள்ள விலையிலும் புடவைகளை காட்டுகிறேன் என்று கூறியுள்ளார். தனது மனைவி முன் ஒருவன் தன்னைஅங்கிள் என்று கூறியதை தாங்க முடியாமல் விஷாலிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனது மனைவியுடம் வெளியேறிய ரோகித் உடன் சிலரை அழைத்துவந்து விஷலை கடைக்குள் இருந்து வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#Offbeat"अंकल जी, कितने की साड़ी दिखा दू"इतना कहने पर ग्राहक (अंकल) ने दुकानदार को दुकान से खींच कर बेल्ट से पीटा। भोपाल की घटना pic.twitter.com/WkbzXR36iB