சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர். இவர் தற்போது ஒரு மாடல் மற்றும் சமூக வலைதள பிரபலம் (Social Media Influencer) ஆவார். பல முன்னணி ஆடை மற்றும் அழகு சாதன பிராண்டுகளுக்கு விளம்பரத் தூதராகப் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சாரா டெண்டுல்கர் பீர் பாட்டிலைப் பிடித்திருப்பது போன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புத்தாண்டைக் கொண்டாட அவர் தனது நண்பர்களுடன் கோவா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் சாரா டெண்டுல்கர் தனது சில நண்பர்களுடன் நடந்து வருகிறார். அப்போது அவரது கையில் ஒரு பீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைக் காண முடிகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி விவாத பொருளாக மாறியுள்ளது. சிலர் சாரா டெண்டுல்கரை விமர்சித்தனர். மற்றவர்கள் அவரை ஆதரித்து, அவள் விரும்பியபடி அவள் விடுமுறையை அனுபவிக்கிறார் என என்று கூறினர். மற்றும் சிலர் அது பீர் பாட்டில் தான என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
இருப்பினும், ஒருவர் அவரை ட்ரோல் செய்து, சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் எந்த மதுபான பிராண்டையும் புகைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ இல்லை என்றும் ஆனால் அவரது மகள் சாரா கோவாவின் தெருக்களில் பீர் பாட்டிலுடன் சுற்றித் திரிந்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Sachin Tendulkar : I will never promote alcohol and tobacco.Le his daughter Sara on streets of Goa with ?: pic.twitter.com/QDeQ8YGMoW