இந்தியா

மண்டல, மகர விளக்கு சீசன் - சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏ.ஐ. தொழில்நுட்பம்

சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனின்போது ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்று மந்திரி முரளீதரன் தெரிவித்தார்.

சபரிமலை கோவில்

சபரிமலையில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் மந்திரி முரளீதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மந்திரி முரளீதரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளன. எனவே தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் அடிப்படை வசதிகளை திறம்பட மேம்படுத்தி செயல்படுத்த அந்தந்த துறை அதிகாரிகளுக்கு இப்போதே உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பம்

கடந்த ஆண்டில் நடந்த தவறு, இந்த ஆண்டு நடைபெறாத வகையில் செயல்படுவது உறுதி செய்யப்படும். சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக ஒவ்வொரு ஆண்டும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும். அனைத்து பக்தர்களுக்கும் சபரிமலை தரிசனம் உறுதி செய்யப்படும். சீசனுக்கு முன்னதாக முதல்-மந்திரி தலைமையில் தென் மாநில மந்திரிகளின் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.