பிரதமர் மோடி, ராகுல் காந்தி 
இந்தியா

Bharat Ratna | கன்ஷிராமுக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்

மாலை மலர்

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராம் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்

இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கன்ஷி ராம் இந்திய அரசியலின் தன்மையை மாற்றியமைத்தவர். தனது இயக்கங்கள் மூலம் ஏழைகளிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவர்களின் வாக்கு, குரல் மற்றும் பிரதிநிதித்துவம் முக்கியம். இந்த நாடு அனைவருக்கும் சமமானது.

நமது அரசியலமைப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் சமத்துவம், கண்ணியம் மற்றும் பங்கேற்பை உறுதியளிக்கிறது.

சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாக்குறுதிகளை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக கன்ஷிராம் ஜி தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் அவர் இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தினார்.

அவருக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்குவது நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும்.

இது அவரை அதிகாரமளித்தல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக தொடர்ந்து பார்க்கும் மில்லியன் கணக்கான மக்களின் விருப்பங்களை மதிக்கும் என தெரிவித்துள்ளார்.