இந்தியா

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது: உமர் அப்துல்லா பங்கேற்பு

பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார்.ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

ஸ்ரீநகர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது.  குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும் தொடங்கியது.

பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். இதில் அவருடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா இணைந்தார். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய உமர் அப்துல்லா, ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரையானது, அவரது இமேஜை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் யாத்திரை அல்ல, மாறாக நாட்டின் சூழலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றார்.