மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வடி சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிம்ப்ரி சிஞ்ச்வடியின் தபோடி மற்றும் புகேவாடி பகுதிகளில் 8 பேரும், புனேயின் காலே படல் பகுதியில் 3 பேரும், ஹடப்சர் பகுதியில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மகிராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயத்தைத் தயாரித்த முக்கியக் குற்றவாளியான யோகேஷ் வான்கடே என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர் மீது ஏற்கனவே பல சட்டவிரோத மதுபான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.