இந்தியா

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.புதிய முதல்வரை தேர்வு செய்து பாஜக அறிவிக்காத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.

மாலை மலர்

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இரு பழங்குடியினர் சமூகத்தினர் இடையே நடந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முடியாததால் 9ம் தேதி பைரன் சிங் ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வரை தேர்வு செய்து பாஜக அறிவிக்காத நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.