இந்தியா

மகளிர் உலக செஸ் சாம்பியன் திவ்யா தேஷ்முக்கிற்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

மகளிர் உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கை நினைத்து பெருமைப்படுகிறேன்.இரண்டு சிறந்த இந்திய சதுரங்க வீராங்கனைகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டி.

மகளிர் செஸ் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி, அதுவும் பத்தொன்பது வயதில் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கோனேரு ஹம்பி இரண்டாம் இடத்தைப் பிடித்ததால், சதுரங்க உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

இது நம் நாட்டில், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுதியான திறமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் சிறந்து விளங்கியதற்காக கோனேரு ஹம்பிக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு பெண் சாம்பியன்களும் தொடர்ந்து அதிக பெருமைகளைக் கொண்டு வந்து நமது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இரண்டு சிறந்த இந்திய சதுரங்க வீராங்கனைகள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டி!

2025 ஆம் ஆண்டுக்கான FIDE மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்ற திவ்யா தேஷ்முக்கை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகள், இது பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.

கோனேரு ஹம்பியும் சாம்பியன்ஷிப் முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இரு வீராங்கனைகளுக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT